மதத்தை வென்ற மனிதம்! ஐயப்ப பக்தரின் வலியை மறைக்க செய்த இஸ்லாமிய பெண்!!

 

மதத்தை வென்ற மனிதம்! ஐயப்ப பக்தரின் வலியை மறைக்க செய்த இஸ்லாமிய பெண்!!

திருவனந்த புரத்தில் காலில் அடிபட்ட ஐயப்ப பக்தரின் காலை கைகளால் தழுவி கட்டுப்போட்ட இஸ்லாமிய பெண்ணின் செயல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருவனந்தபுரத்தில் மக்கள் அதிகளவில் வந்து செல்லும் கிழக்கேகோட்டை பேருந்து நிலையம் ஓரத்தில் ஐயப்ப பக்தர் ஒருவர் காலில் அடிபட்டு இரத்தம் வழிந்தோட  வலியால் துடித்துக்கொண்டிருந்தார். அந்த வழியாக சென்ற யாருக்கு அவரின் வலி தெரியவில்லை. இந்நிலையில் பேருந்தில் இருந்து இறங்கி தனது தோழிகளுடன் அலுவலகம் நோக்கி நடந்து சென்ற இளம்பெண் புஷாரா, வலியில் துடித்த ஐயப்ப பக்தரை பார்த்துவுடன் அருகிலிருக்கும் கடைக்கு சென்று ஒரு பாட்டில் தண்ணீர் வாங்கி இரத்தத்தை கழுவினார்.

அதன்பின் மருந்து கடை சென்று டிரெசிங் பொருட்கள் வாங்கி வந்து அவரது கால் காயத்துக்கு கட்டு போட்டார். சுற்றி நின்று வேடிக்கை பார்த்து மற்றும் கடந்து சென்ற யாருக்கும் காயம்பட்டவருக்கு உதவ வேண்டும் என்றோ, மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல வேண்டும் என்ற எண்ணம் வராதபோது சாதி, மதங்களை கடந்து புஷாராவின் மனிதம் வெளியே வந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.