மண்பாண்ட தொழிலாளர்களுக்கு விலையில்லாமல் மண் வழங்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு!

 

மண்பாண்ட தொழிலாளர்களுக்கு விலையில்லாமல் மண் வழங்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு!

தங்களுக்கு தேவையான மண்ணை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

கொரோனா வைரஸால் ஊரடங்கு அமலில் இருப்பதால் விவாசாயத்துக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது. தமிழகத்தில் தற்போது கோடைக்காலம் நிலவுவதால் பாசனத்திற்கு திறந்து விட வேண்டிய நீர் திறக்கப்ப்டாததால் விவசாயிகளும் மண்பாண்ட தொழிலாளர்களும் தங்களுக்கு தேவையான மண்ணை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

ttn

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் உள்ள ஏரிகள்,குளங்கள் வாய்க்கால்கள் போன்ற நீர் கட்டமைப்புகளை மக்கள் பங்களிப்புடன் தூர்வாரி அவற்றின் கொள்ளளவை மீட்டெடுக்க முதலமைச்சர் அவர்களால் ‘குடிமராமத்து திட்டம்’ 2007 இல் தொடங்கப்பட்டது. இதனால் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்த நீர் ஆதாரங்களில் பருவமழையின் போது வழக்கத்தைவிட நீர் அதிகம் தேக்கப்பட்டு விவசாயத்திற்கும் குடிநீருக்கும் பெரும் அளவில் பயன்படுத்தப்பட்டது..

மேலும் இந்த நீர்நிலைகளில் உள்ள களிமண், வண்டல் மண் மற்றும் சரளை மண்ணை விவசாயிகள் மற்றும் மண்பாண்டம் செய்பவர் களுக்கு வழங்கும் பொருட்டு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி அரசாணை எண்.50 தொழில்துறை நாள் 27.4.2017 அன்று வெளியிடப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் இதுவரை 6 லட்சத்து 69 ஆயிரத்து 900 விவசாயிகளும் மண்பாண்ட தொழில் புரிவோரும் பயன்பெற்றுள்ளனர்.

ttn

தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கில் இருந்து விவசாய பணிகளுக்கு ஏற்கனவே விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது இக்கோடை காலத்தில் பாசனத்திற்கு நீர் திறப்பு நிறுத்தப்பட்டு இருப்பதால் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களுக்கு தேவையான களிமண்,  வண்டல் மண் சவுடு மற்றும் சரளை மண் ஆகியவற்றை தங்கள் கிராமத்திலோ அல்லது அருகாமை கிராமத்தில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்களில் இருந்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் தவிர ஏனைய மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று எடுத்துக் கொள்ளலாம்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.