மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் வலியபடுக்கை பூஜை 

 

மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் வலியபடுக்கை பூஜை 

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில்  கார்த்திகை கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இந்த வருடத்தின் 3-வது வலியபடுக்கை பூஜை இன்று நடைபெறுகிறது.

கன்னியாகுமரி:

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலும் ஒன்றாகும். கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டி இங்கு வந்து அம்மனை வழிபடுவதால் இக்கோயில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. 

valiaypadukkai

இங்கு தினமும் நடக்கும் பொங்கல் மற்றும் வெடி வழிபாட்டை அடுத்து ஆண்டிற்கு 3 முறை நடக்கும் வலியபடுக்கை பூஜை முக்கிய வழிபாடாக கருதப்படுகிறது. இந்த வலியபடுக்கை பூஜை  ஆண்டிற்கு மூன்று நாட்கள் மட்டுமே  வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது .

இந்த பூஜை  மாசிக் கொடையின் 6-ம் நாள் பரணிக்கொடை மற்றும் கார்த்திகை மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை ஆகிய 3 நாட்கள் மட்டும் நடைபெறுகிறது.வலியபடுக்கையின்போது அம்மனுக்கு மிகவும் பிடித்த உணவு பதார்த்தங்கள், கனி வகைகள் ஆகியவற்றுகளை அம்மன் முன் பெரும் படையலாக படைத்து அம்மனை வழிபடுவதாகும்.

valiyapadukka

 
கார்த்திகை கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இந்த வருடத்தின் 3வது வலியபடுக்கை பூஜை இன்று கொண்டாடப்படுகிறது . இதை முன்னிட்டு இன்று காலை 4 மணிக்கு திருநடை திறக்கப்படுகிறது. 

அதனையடுத்து 5 மணிக்கு பஞ்சாபிஷேகமும் 6.30 மணிக்கு தீபாராதனையும் மதியம் உச்சி பூஜையும்  மாலை 6.30 மணிக்கு தீபாராதனையும் இரவு 9 மணிக்கு அத்தாள பூஜையும் . 9.30 மணிக்கு

valiaypadukkai

 

அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனியும்  நள்ளிரவு 12 மணி முதல் 1 மணிக்குள் வலியபடுக்கை பூஜை யும் மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த விழாவில் பக்தர்கள் நள்ளிரவு வரை காத்திருந்து அம்மனை வழிபடுவர் என்பது குறிப்பிடத்தக்கது.