மட்டன் சூப்பில் மர்டர்! ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரை கொன்ற பெண்… பகீர் பின்னணி

 

மட்டன் சூப்பில் மர்டர்! ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரை கொன்ற பெண்… பகீர் பின்னணி

கேரளாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரை விஷம் கொடுத்து கொலை செய்த பெண்ணை 14 ஆண்டுகளுக்கு பிறகு போலிசார் கைது செய்துள்ளனர்.

கேரளாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரை விஷம் கொடுத்து கொலை செய்த பெண்ணை 14 ஆண்டுகளுக்கு பிறகு போலிசார் கைது செய்துள்ளனர்.

இடுக்கி மாவட்டம் கட்டப்பனை பகுதியை சேர்ந்த ஜோளி. கொல்லப்பட்ட டோம் தாமஸ் மற்றும் அன்னம்மாள் தம்பதிகளின் மகனான ரோய் தாமஸின் மனைவி தான் ஜோளி. இவர்களது குடும்பத்தில் அன்னம்மாளின் சகோதரர் மேத்யூ. சகோதரரின் மருமகள் சிலி, இவர்களது 2 வயது குழந்தை அல்பைன் அகியோர் இணைந்து கூட்டு குடும்பமாக வசித்துவந்தனர். 

Murder

இந்த நிலையில் கடந்த 2002 ஆம் ஆண்டு ஆகஸ்டு 22 ஆம் தேதி ஆட்டுக்கால் சூப் சாப்பிட்ட அன்னம்மாள் மயக்கமடைந்து உயிரிழந்தார். அவரது கணவர் டோம் தாமஸும் கடந்த 2008 ஆம் ஆண்டு மரவள்ளிக் கிழங்கு சாப்பிட்டபின் உயிரிழந்தார். இந்த இரண்டு இறப்பின்போதும் ஜோளி மட்டுமே அவர்களுடன் இருந்துள்ளார். அதன் பின்னர் 2011 ஆம் ஆண்டு ஜோளியின் கணவர் ரோய் தாமஸ் இரவு உணவருந்திய பின் திடீரென மரணமடைந்தார். உடற்கூறு ஆய்வில் அவரது உடம்பில் சயனைடு இருந்துள்ளதாக தெரியவந்தது. இருப்பினும் தற்கொலையாக இருக்கலாம் என போலீசார் சந்தேகமடைந்தனர். 

2014 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி அன்னம்மாளின் சகோதரர் மேத்யூ திடீரென்று சரிந்து விழுந்து மரணமடைந்தார். அதே ஆண்டு 2 வயது சிறுவனுன் ஆல்பைன் கறி உணவு சாப்பிட்ட நிலையில், மூன்று நாட்கள் கோமாவில் சிகிச்சை பெற்று பின்னர் மரணமடைந்தார். இப்படி குடும்பத்திலுள்ள 6 பேரையும் உணவில் விஷம் வைத்து கொலை செய்துள்ளார் ஜோளி.. தற்போது இரண்டாவது திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக வாழும் ஜோளி, சொத்துக்காகவே இத்தனை பேரையும் கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.