மக்கள் விரும்பினால் ரஜினி முதல்வர் ஆவார்! – ரசிகர் மன்றத்தினர் நம்பிக்கை

 

மக்கள் விரும்பினால் ரஜினி முதல்வர் ஆவார்! – ரசிகர் மன்றத்தினர் நம்பிக்கை

அரசியல் கட்சி தொடங்குவது பற்றி நிருபர்கள் மத்தியில் பேசிய ரஜினிகாந்த் தான் முதல்வர் பதவியை ஏற்பது பற்றி கனவில் கூட நினைத்தது இல்லை என்று கூறியிருந்தார். மேலும் மக்கள் மத்தியில் புரட்சி வந்தால் அரசியலுக்கு வருகிறேன் என்று கூறினார். இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் சோர்வை ஏற்படுத்தியது.

மக்கள் விரும்பினால் முதல்வர் பதவியை ஏற்பதில் ரஜினிக்கு தயக்கம் இல்லை என்றும் அது தொடர்பான விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்பட வேண்டும் என்றும் ரஜினி ரசிகர் மன்றத்தினர் தெரிவித்துள்ளனர்.
அரசியல் கட்சி தொடங்குவது பற்றி நிருபர்கள் மத்தியில் பேசிய ரஜினிகாந்த் தான் முதல்வர் பதவியை ஏற்பது பற்றி கனவில் கூட நினைத்தது இல்லை என்று கூறியிருந்தார். மேலும் மக்கள் மத்தியில் புரட்சி வந்தால் அரசியலுக்கு வருகிறேன் என்று கூறினார். இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் சோர்வை ஏற்படுத்தியது. ஆனால், மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக ரஜினி கூறி வருகிறார். 

rajini

கொரோனா பீதியில் ரஜினியை மறந்து அனைவரும் அவரவர் வேலையில் தீவிரமாக உள்ள நிலையில் தன்னுடைய கருத்து சுழலாக உருவாகியுள்ளது… தேர்தல் நேரத்தில் அது சுனாமியாக மாறும் என்று எல்லாம் ரஜினி பஞ்ச் டயலாக் பேசிக் கொண்டிருக்க, அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகள் அவருக்கும் மேல் பேசி வருகின்றனர். 
ரஜினி கூறியது போல மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தப் போவதாக ரஜினி ரசிகர்கள் களமிறங்கி உள்ளனர். இது குறித்து மாவட்டச் செயலாளர்கள் சிலர் கூறுகையில், “ரஜினியின் கருத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ரஜினியின் கருத்தை மக்கள் மத்தியில் கொண்டுபோய் சேர்க்க அதிக அளவில் இளைஞர்கள் மன்றத்தில் இணைந்து வருகின்றனர். ரஜினிகாந்த் முதல்வராக வேண்டும் என்று மக்கள் விரும்பினால், அதை அவர் தட்டமாட்டார்” என்றனர்.