மக்கள் கட்டுப்பாட்டுடன் நடக்காவிட்டால் 4வது ஊரடங்கைத் தவிர்க்க முடியாது – டாக்டர் ராமதாஸ் கவலை

 

மக்கள் கட்டுப்பாட்டுடன் நடக்காவிட்டால் 4வது ஊரடங்கைத் தவிர்க்க முடியாது – டாக்டர் ராமதாஸ் கவலை

சென்னையில் கொரோனா பரவல் ஆபத்து அதிகரித்து வருகிறது, மக்கள் கட்டுப்பாட்டுடன் இல்லாவிட்டால் நான்காம் கட்ட ஊரடங்கைத் தவிர்க்க முடியாது என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னையில் கொரோனா பரவல் ஆபத்து அதிகரித்து வருகிறது, மக்கள் கட்டுப்பாட்டுடன் இல்லாவிட்டால் நான்காம் கட்ட ஊரடங்கைத் தவிர்க்க முடியாது என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.
டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள ட்வீட் பதிவகளில் கூறியிருப்பதாவது:
“சென்னையில் சில ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதால், நோய்ப்பரவும் ஆபத்து அதிகரித்துள்ளது. இத்தகைய சூழலில் பொதுமக்கள் ஏற்கனவே இருந்ததை விட பல மடங்கு கூடுதல் கட்டுப்பாட்டுடன் வீடு அடங்கி இருக்க வேண்டும்; அரசும் பல மடங்கு கடுமையாக ஊரடங்கை செயல்படுத்த வேண்டும்!

சென்னை மாநகர மக்கள் மிக மிக கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளா விட்டால் நான்காம் கட்டமாகவும் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதைத் தவிர்க்க முடியாது. சென்னை மக்கள் சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டும் என்றால் அடுத்த 15 நாட்களுக்கு உங்களை நீங்களே வீடுகளில் அடைத்துக் கொள்ள வேண்டும்!

சென்னை கோயம்பேடு சந்தை புதிய கொரோனா பரவல் மையமாக உருவெடுத்துள்ளது. கோயம்பேட்டில் பணியாற்றி கடலூர் மாவட்டத்திற்கு திரும்பிய 7 பேருக்கும், அரியலூர் மாவட்டத்திற்கு திரும்பிய 19 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக வெளியாகி உள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

 

சென்னையில் கடந்த சில நாட்களில் மட்டும் பல லட்சக்கணக்கான மக்கள் கோயம்பேடு சந்தைக்கு சென்று, சமூக இடைவெளி இல்லாமல் முண்டியடித்து காய்கறி வாங்கிச் சென்றுள்ளனர். அவர்களில் பலருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்பதால், அவர்களை தேடி கொரோனா ஆய்வு செய்ய வேண்டும்!

 

கோயம்பேடு சந்தையில் ஆயிரக்கணக்கான கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், அங்கு பணியாற்றி வந்த பல்லாயிரக்கணக்கானோர் சொந்த ஊர் திரும்பியுள்ளனர். அவர்கள் மூலம் நோய்ப் பரவக் கூடும் என்பதால், கோயம்பேடு சென்று வந்தவர்களுக்கு கொரோனா ஆய்வு நடத்தப்பட வேண்டும்!” என்று கூறியுள்ளார்.