மக்களுக்கு தேநீர் தயாரித்து கொடுத்த முதல்வர்: வைரல் வீடியோ!
அங்குள்ள தேநீர் கடைக்கு சென்று தேநீர் தயாரித்து அங்கிருந்த மக்களுக்கு கொடுத்தார்.
திகா : மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கிராம மக்களுக்கு தேநீர் தயாரித்து கொடுக்கும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எளிமையாக மக்களுடன் பழகக்கூடியவர். இவர் சமீபத்தில் திகா பகுதியிலுள்ள தத்தாப்பூர் கிராமத்துக்கு சென்றார்.
அங்குள்ள மக்களிடம் உரையாடிய அவர், அங்குள்ள தேநீர் கடைக்கு சென்று தேநீர் தயாரித்து அங்கிருந்த மக்களுக்கு கொடுத்தார்.
Sometimes the little joys in life can make us happy. Making and sharing some nice tea (cha/chai) is one of them. Today, in Duttapur, Digha | কখনো জীবনের ছোট ছোট মুহূর্ত আমাদের বিশেষ আনন্দ দেয়। চা বানিয়ে খাওয়ানো তারমধ্যে একটা। আজ দীঘার দত্তপুরে। #Bangla pic.twitter.com/cC1Bo0GuYy
— Mamata Banerjee (@MamataOfficial) August 21, 2019
இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ‘சில நேரங்களில் இதுபோன்ற சின்ன சின்ன விஷயங்கள் நமது வாழ்வில் மகிழ்ச்சியை கொண்டு வரும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவானது தற்போது சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.