மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்தே போட்டி: ஜி.கே.வாசன் அறிவிப்பு

 

மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்தே போட்டி: ஜி.கே.வாசன் அறிவிப்பு

மக்களவை தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்தே போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்

சென்னை: மக்களவை தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்தே போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் வேற்று பெற்று அரியணை ஏறியது. இந்த அரசின் பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ளது. இதையடுத்து, வருகிற ஏப்ரல் அல்லது மே மாதம் மக்களவைக்கு தேர்தல் நடைபெறலாம் என தெரிகிறது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட பணிகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் துவங்கியுள்ளது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வரும் சூழலில், கூட்டணி, தொகுதி பங்கீடு போன்றவை வெளிப்படையாக அறிவிக்கப்படாவிட்டாலும் ரகசிய பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை, ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத தேர்தல் என்பதால் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்நிலையில், மக்களவை தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்தே போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.