மக்களவைத் தேர்தலில் விஜய்யின் ஆதரவு யாருக்கு ? சூசகமாக பதிலளித்த தந்தை எஸ்.ஏ.சி
பிரதமர் மோடி வரும் மக்களவைத் தேர்தலுக்கு பிறகு மீண்டும் ஆட்சியைப் பிடிக்கக் கூடாது என்பதுதான் தமிழர்களின் முடிவு.
நெல்லை : பிரதமர் மோடி வரும் மக்களவைத் தேர்தலுக்கு பிறகு மீண்டும் ஆட்சியைப் பிடிக்கக் கூடாது என்பதுதான் தமிழர்களின் முடிவு. இதில் அனைவரும் தெளிவாக உள்ளனர் என்று நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார்.
நெல்லை வடக்கன்குளத்தில் இயக்குநர் சந்திரசேகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘சினிமாவை காப்பாற்ற வேண்டும் என்றால் அரசால் தான் முடியும். சமீபகாலத்தில் சினிமா துறையில் வியாபாரிகள் வந்துவிட்டனர். சினிமா என்பது காதலித்து செய்யக் கூடியது. தமிழ் ராக்கர்சை அரசால் தான் ஒழிக்க முடியும்.’என்றார்.
இதை தொடர்ந்து வரும் மக்களவைத் தேர்தலில் விஜய்யின் ஆதரவு யாருக்கு? என்ற கேள்வி கேட்கப்பட்ட போது, ‘அதை அவரிடம் தான் கேட்க வேண்டும். எனது மகன் விஜய்யை டாக்டராக்க வேண்டும் என விரும்பினேன். ஆனால், அவர் ஆக்டராகிவிட்டார். வரும் மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கக் கூடாது என்பதுதான் தமிழர்களின் முடிவு. இதில் அனைவரும் தெளிவாக உள்ளனர்’ என்றார்.