மகாராஷ்டிராவில் ஒருவர் உயிரிழப்பு – இந்தியாவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 3-ஆக அதிகரிப்பு

 

மகாராஷ்டிராவில் ஒருவர் உயிரிழப்பு – இந்தியாவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 3-ஆக அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3-ஆக அதிகரித்துள்ளது.

மும்பை: இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3-ஆக அதிகரித்துள்ளது.

சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காய்ச்சல் உலகம் முழுக்க பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளது. இந்த வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாததால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே செல்கிறது. பல்வேறு நாடுகள் கொரோனா வைரஸை எதிர்கொள்ள பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது.

ttn

ஏற்கனவே கர்நாடகா மற்றும் டெல்லியில் என இருவர் கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரானா வைரஸால் பாதிக்கப்பட்ட 64 வயதான ஒருவர் மரணம் அடைந்துள்ளார். இதன் மூலம் இந்தயாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3-ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை 129 பேர் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 13 பேர் குணமாகி வீட்டுக்கு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.