மகாத்மா காந்தி மட்டும் இப்பம் உயிரோடு இருந்தால் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட அன்றே பாதயாத்திரை நடத்தி இருப்பார்- மோடியை தாக்கிய திக்விஜய சிங்

 

மகாத்மா காந்தி மட்டும் இப்பம் உயிரோடு இருந்தால் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட அன்றே பாதயாத்திரை நடத்தி இருப்பார்- மோடியை தாக்கிய திக்விஜய சிங்

மகாத்மா காந்தி மட்டும் இப்பம் உயிரோடு இருந்திருந்தால்காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கிய அன்றே அதனை கண்டித்து டெல்லியிலிருந்து ஸ்ரீநகருக்கு பாதயாத்திரை நடத்தி இருப்பார் என மோடி அரசை காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய சிங் கடுமையாக தாக்கியுள்ளார்.

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியினர் ஒரு விழா ஏற்பாடு செய்து இருந்தனர். அந்த விழாவில் கலந்து கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திக்விஜய சிங் பேசுகையில் கூறியதாவது: காஷ்மீர் மரபு, ஜனநாயகம் மற்றும் மனிதநேயம் ஆகிய 3 கொள்கைகள் வாயிலாக காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்ற முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கோட்பாட்டை பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் சிதைத்து விட்டனர்.

அமித் ஷா, மோடி

மகாத்மா காந்தி மட்டும் இப்பம் உயிரோடு இருந்திருந்தால் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட அன்றே மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியிருந்து ஸ்ரீநகர் லால் சவுக்குக்கு பாதயாத்திரை மேற்கொள்ள போவதாக அறிவித்து இருப்பார். முஸ்லிம்களின் தீவிரமயமாக்கல் போலவே இந்துக்களின் தீவிரமயமாக்கலும் ஆபத்தானது. பெரும்பான்மையினர் வகுப்புவாதத்தில் ஈடுபட தொடங்கி விட்டால் நாட்டை அதிலிருந்து காப்பாற்றுவது கடினம். இவ்வாறு அவர் பேசினார்.

மகாத்மா காந்தி

சுமார் 70 ஆண்டுகளாக இருந்த இந்த காஷ்மீர் பிரச்னைக்கு முடிவு கட்டும் விதமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதியன்று, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியது. மேலும் அம்மாநிலத்தை ஜம்மு அண்டு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என அறிவித்தது. இதற்கு பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இருப்பினும், காங்கிரஸ் கட்சி மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதேசமயம் காங்கிரசை சேர்ந்த பல தலைவர்கள் மத்திய அரசு நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.