மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாள்: தலைவர்கள் மரியாதை!

 

மகாத்மா காந்தியின் 150 வது  பிறந்தநாள்: தலைவர்கள் மரியாதை!

தேசப்பிதா காந்தியடிகளின் 150வது  பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. 

தேசப்பிதா காந்தியடிகளின் 150வது  பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. 

gandhi

நாம் சுதந்திர காற்றை சுவாசிக்க மிகமுக்கிய பங்காற்றியவர்  காந்தியடிகள். தேசப்பிதா என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் காந்திஜியின்   150வது  பிறந்தநாள் இன்று நாடெங்கிலும் கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாகக் காந்தி பிறந்த குஜராத் மாநிலத்திலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 

gandhi

அதேபோல் டெல்லியில் ராஜ்காட்டிலுள்ள காந்தி சமாதிக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் பலரும் அஞ்சலி செலுத்திவிட்டுச் செல்கின்றனர். குறிப்பாகக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

gandhi

இதைத் தொடர்ந்து   பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர். 
இதையடுத்து குஜராத் செல்லும் பிரதமர், அங்கு காந்தி தங்கியிருந்த சபர்மதி ஆசிரமத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.