மகளுக்கு எதிராக கேள்வி கேட்ட சேரன்: தடுமாற்றத்தில் லாஸ்லியா 

 

மகளுக்கு எதிராக கேள்வி கேட்ட சேரன்: தடுமாற்றத்தில் லாஸ்லியா 

பிக் பாஸ் 3யின் இன்றைக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் சீசன் 3 தொடங்கி 64 நாட்களை எட்டியுள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இதிலிருந்து இதுவரை பாத்திமா பாபு,வனிதா, மோகன் வைத்யா, மீரா, சாக்ஷி, அபிராமி, சரவணன்,மதுமிதா மற்றும் கஸ்தூரி ஆகியோர் வெளியேறியுள்ளனர். 

இந்த நிலையில் இன்றைக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. அதில் நேற்று நடைபெற்ற டாஸ்கின் மிதி காட்டப்பட்டுள்ளது. அப்போது தான் இதில் வெற்றி பெற்ற அனைத்து தகுதிகளும் உள்ளது என்று பேச சென்ற லாஸ்லியவை குறித்து வைத்து சில பேர் கேள்வி கேட்பது போல் உள்ளது. 

அந்த புரோமோவில் தர்ஷன்- லாஸ்லியாவிடம், ‘சேரனை நாமினேட் செய்த பின்பு வந்து இங்கே அழுது கொண்டு இருந்தீர்கள்? அந்த ஒரு விஷயத்திலே தங்க முடியவில்லை என்றால், நீங்கள் எப்படி இதை கண்டு பைனல் போவீங்க? என்றார். அதற்கு அவர், ‘எனக்கு அவங்க பண்ணது தப்பா தெரிஞ்சிது. நான் அவங்கள நாமினேட் பண்ண மாட்டேன் சொன்னேன். அதை எனக்கு நெருக்கமாக உள்ள கவினிடம் கூட சொல்லி இருக்கேன்’ என்றார். 

அதற்கு சேரன், ‘முதல் நாள் இரவே எப்படி சொன்னிங்க? அப்போ உங்கள யாராவது influence செஞ்சங்களா?’ என்று கேட்க உடனே பதில் சொல்லத் தெரியாமல் லாஸ்லியா தடுமாறுவது போல் புரோமோ முடிக்கப்பட்டுள்ளது.