‘மகளின் நிர்வாண புகைப்படங்களை அனுப்பி நண்பர்களுடன் பேரம் பேசிய தந்தை’ நடுங்க வைக்கும் வாக்குமூலம்!
பேரம் பேசி காசு வாங்கிக்கொண்டு என்னை பாலியல் வன்கொடுமை செய்ய வைத்தார்’ என கூறி நடுங்க வைக்கிறார்.
தென்னிந்தியாவைச் சேர்ந்த சிறுமி ஒருவர் தனது தந்தை அவருடைய நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு தனக்கும் தனது தாய்க்கும் பாலியல் தொல்லை கொடுப்பதாகக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து சிறுமி பயிலும் பள்ளி ஆசிரியை ஒருவருக்கு தெரியவர அவரின் உதவியுடன் சிறுமியிடம் பேசிய உளவியலாளர்கள் மற்றும் குழந்தைகள் நல அமைப்பினர் சிறுமியின் வாக்குமூலத்தைக் கேட்டு அதிர்ந்து போயுள்ளனர். தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து பேசியுள்ள சிறுமி, தன் தந்தையின் நண்பர்கள் என தன் வீட்டுக்கு வரும் பலர் அவருடன் சேர்ந்து மது அருந்துவர்.பின்பு என் அம்மாவை அவர்கள் அனைவரும் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். அப்போது எனது தந்தை என்னையும் அறைக்குள் பிடித்து தள்ளினார்.அவர்கள் என்னையும் பாலியல் வன்கொடுமை செய்தனர்’ என்றார்.
தொடர்ந்து பேசியுள்ள அந்த சிறுமி, ‘தனது நிர்வாண படங்களை புகைப்படம் எடுத்து தெரியவந்தவர்களுக்கு அனுப்பிய அவர், அவர்களுடன் பேரம் பேசி காசு வாங்கிக்கொண்டு என்னை பாலியல் வன்கொடுமை செய்ய வைத்தார்’ என கூறி நடுங்க வைக்கிறார்.
இந்த விவகாரம் குறித்து குழந்தைகள் நல அமைப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் முதற்கட்டமாக 25 பேரை கைது செய்துள்ளனர். பாலியல் வன்கொடுமை செய்த 30 பேர்களுள் 25 பேரை சிறுமியே அடையாளம் காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் ஈடுபட்டுள்ள மற்றவர்களையும் போலீசார் தேடி வருவதோடு, சிறுமியின் பெற்றோரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.