மகன் சாவில் சந்தேகமடைந்த பெற்றோர்: 28 நாட்களுக்கு பிறகு சடலத்தை தோண்டி எடுத்த போலீசார்!

 

மகன் சாவில் சந்தேகமடைந்த பெற்றோர்:  28 நாட்களுக்கு பிறகு சடலத்தை தோண்டி எடுத்த போலீசார்!

மகனின் சாவில் மர்மம் இருப்பதாகப் பெற்றோர் புகார் அளித்ததால் 28 நாட்களுக்குப் பின் சடலத்தைத் தோண்டி எடுத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை: மகனின் சாவில் மர்மம் இருப்பதாகப் பெற்றோர் புகார் அளித்ததால் 28 நாட்களுக்குப் பின் சடலத்தைத் தோண்டி எடுத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கம்பம் அருகே சுருளிப்பட்டி வடக்குத்தெருவைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவருக்கும்  கலைமணி என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. சில நாட்களுக்குப் பிறகு கருத்து வேறுபாட்டின் காரணமாக கணவன் மனைவி இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளன.

இந்நிலையில்தான் கடந்த நவம்பர் 8 ஆம் தேதி வாயில் நுரை தள்ளிய நிலையில் ஈஸ்வரன் மர்மமாக இறந்துகிடந்துள்ளார்.  குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட அதிருப்தியில் மகன் தற்கொலை செய்துகொண்டதாகக் கருதி வழக்கமான சடங்குகளுடன் சடலத்தைப் புதைத்துள்ளனர். 

கணவன் இறந்த பிறகு மனைவி கலைமணியின் நடவடிக்கையில் சில நாட்களிலேயே மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த அழகர்சாமி என்பவருடன் கலைமணி நெருங்கிப் பழகியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஈஸ்வரனின் பெற்றோர் மற்றும் உறவினருக்கு மருமகள் மீது சந்தேகம் வலுத்தது. தனது மகனின் சாவின் மர்மம் இருப்பதாக முடிவு செய்தனர்.

இதனால் ஈஸ்வரனின் சாவில் மர்மம் இருப்பதாகக் கருதி பெற்றோர் ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், புதைக்கப்பட்ட சடலத்தை  28 நாட்களுக்குப் பிறகுத் தோண்டியெடுத்து, கள்ளத்தொடர்பு விவகாரம் காரணமாக ஈஸ்வரன் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.