ப.சிதம்பரம் மீது அதிர வைக்கும் செக்ஸ் புகார்… பிட்டைப் போட்டு சி.பி.ஐ., கடிவாளம்..!

 

ப.சிதம்பரம் மீது அதிர வைக்கும் செக்ஸ் புகார்… பிட்டைப் போட்டு சி.பி.ஐ., கடிவாளம்..!

சிதம்பரத்தையும் இந்திராணி முகர்ஜியையும் நேருக்கு நேர் உட்கார வைத்து இந்திராணி முகர்ஜி சிதம்பரத்துடன் பண ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் உள்ள தொடர்புகள் பற்றி சொல்லும் சம்பவங்களுக்கு ப.சிதம்பரத்தின் பதிலைக் கேட்டுப் பெற திட்டமிட்டிருக்கிறது.

ட்விட்டரில் கௌரவ் பிரதான் என்பவர் ஆகஸ்டு 23 ஆம் தேதியே வெளியிட்ட பதிவுகள் கடந்த சில நாட்களாக டெல்லி ஊடக உலகிலும், அரசியல், வழக்கறிஞர்கள் வட்டாரத்திலும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த கவுரவ் பிரதானை பிரதமர் மோடி முதல் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வரை ஏராளமான பாஜகவினர் ட்விட்டரில் ஃபாலோ செய்து வருகிறார்கள். பிரதமர் மோடியே ஒருவரை ட்விட்டரில் ஃபாலோ செய்கிறார் என்பதால் அவரது கருத்து அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்று வருகிறது.chidambaram

23 ஆம் தேதி பிரதான் தனது ட்விட்டரில், ”இந்திராணி சிபிஐயிடம் கொடுத்த வாக்குமூலத்தில், ’ஒரு மில்லியன் டாலர் பணம் கொடுத்ததோடு என் உடலையும் பலமுறை சிதம்பரத்துக்காக கொடுத்திருக்கிறேன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்” என்று பதிவிட்டுள்ளார். இதுமட்டுமல்ல சிதம்பரத்துக்கு நெருக்கமான பெண் பத்திரிகையாளர்கள் என்று பெரும் பட்டியலையே வெளியிட்டிருக்கிறார் பிரதான். இதே நேரம் பிரதான் இணைய தளங்களில் இதுவரை பல போலி செய்திகளை பரவ விட்டிருக்கிறவர் என்று அவரது ஒவ்வொரு போலிச் செய்தியையும் புட்டுப் புட்டு வைத்து ஆல்ட் நியூஸ்.காம் என்ற இணைய தளத்தில் ஒரு கட்டுரையே எழுதியிருக்கிறார் பூஜா சௌத்ரி என்ற பத்திரிகையாளர்.karthi

கவுரவ் பிரதானின் போலிச் செய்திகள் வரிசையில் சிதம்பரம் பற்றிய இந்த ட்விட் பதிவுகளும் அடங்குமா என்று டெல்லியில் பல்வேறு பத்திரிகையாளர்களிடம் விசாரித்ததில் பிரதானின் இந்தப் பதிவுக்குப் பின்னால் சிபிஐ இருக்கும் என்கிறார்கள். மேலும், ‘இந்திராணி முகர்ஜியிடம் ப.சிதம்பரத்துக்கு எதிரான வாக்குமூலத்தைப் பெற்றுக் கொண்டுதான் சிதம்பரத்தைக் கைது செய்திருக்கிறார்கள். ஐ.என்.எக்ஸ். விவகாரத்தில் ஊழல் என்பதைத் தாண்டி பாலியல் சங்கதிகளும் இருக்கின்றன. indraniஇந்திராணி மூலமாகவே ப.சிதம்பரத்துக்கு எதிரான பாலியல் வாக்குமூலங்களை சிபிஐ பெற்றிருக்கிறது. மத்திய அரசு ப.சிதம்பரத்தை திட்டமிட்டு அவமானப் படுத்துகிறது என்று சிதம்பரம் குடும்பத்தினர் கூறியதன் பின்னால் இந்த பாலியல் விவகாரம்தான் இருக்கிறது.

ப.சிதம்பரம் பற்றிய பல சங்கதிகளை இந்திராணி முகர்ஜி மூலமாக சேகரித்துக் கொண்ட சிபிஐ, அடுத்து சிதம்பரத்தையும் இந்திராணி முகர்ஜியையும் நேருக்கு நேர் உட்கார வைத்து இந்திராணி முகர்ஜி சிதம்பரத்துடன் பண ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் உள்ள தொடர்புகள் பற்றி சொல்லும் சம்பவங்களுக்கு ப.சிதம்பரத்தின் பதிலைக் கேட்டுப் பெற திட்டமிட்டிருக்கிறது. இதன் மூலம் ப.சிதம்பரத்துக்கு பெரும் நெருக்கடி உருவாகும்’ என்கிறார்கள்.