ப.சிதம்பரம் தான் காரணம்: மோடிக்கு கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட ஓய்வு பெற்ற அதிகாரி!

 

ப.சிதம்பரம் தான் காரணம்: மோடிக்கு கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட ஓய்வு பெற்ற அதிகாரி!

அலகாபாத்: விமானப் படையிலிருந்து ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர்  பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துள்ள  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

suicide

உத்தரப்பிரதேசத்தின் அலகாபாத்  ஹோட்டலில் அசாமைச் சேர்ந்த  ஓய்வு பெற்ற விமானப் படை அதிகாரி பிஜன் தாஸ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது அறையில் பிரதமர் மோடிக்கு எழுதப்பட்ட 5 பக்க கடிதம் கைப்பற்றப்பட்டது.

chithambaram

அதில் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலைக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்தான் காரணம்.  பொருளாதார நெருக்கடி என்பது திடீரென ஏற்படுவது அல்ல. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி ஆகியவை தற்காலிக தாக்கங்கள். அதற்கும் பொருளாதார மந்தநிலைக்கும் சம்பந்தம் இல்லை. அதனால் மோடி  அரசை குற்றம்சாட்டுவது சரியானது அல்ல.  முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஊழல்கள், மோசமான பொருளாதார கொள்கைகள்தான் தற்போதைய நெருக்கடிக்கே காரணம்’ என்று குற்றச்சாட்டி இருந்தார்.

modi

மேலும் அந்த கடிதத்தில் தன் மகனுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும்  தனது இறுதி சடங்குக்காக ரூ1500, அறை வாடகை ரூ500 ஆகியவற்றை அறையில் வைத்துள்ள இடத்தையும் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.