ப.சிதம்பரத்தை நாளை வரை கைது செய்ய தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

 

ப.சிதம்பரத்தை  நாளை வரை கைது செய்ய  தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை  கைது செய்ய நாளை வரை உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

புதுடெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை  கைது செய்ய நாளை வரை உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

chithambaram

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முறைகேடு நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் கடந்த வாரம் ப.சிதம்பரம் சிபிஐ போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவரை காவலில் எடுத்த சிபிஐ அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வந்தது. இதனிடையே, சிதம்பரம் மீது அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் ப.சிதம்பரம் முன் ஜாமீன் கோரிய  உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் நேற்று வரை சிதம்பரத்தை கைது செய்யத் தடைவிதித்து   உத்தரவிட்டிருந்தது.

sc

இந்நிலையில் அமலாக்கத்துறையினர் கைது செய்வதற்கான தடை முடிவடைந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை மீண்டும் இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது  ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறையினர் கைது செய்ய நாளை வரை தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இதன் காரணமாக இந்த வழக்கு விசாரணை நாளை மீண்டும்  நடைபெறவுள்ளது.மேலும் நாளை  மறுநாள்வரை இந்த விசாரணையானது செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.