ப. சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்க மறுப்பு

 

ப. சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்க மறுப்பு

ஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கில் கைதான பா.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க உச்ச நீதி மன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

புது டெல்லி : ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் கைதான ப. சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை உச்ச நீதி மன்றம் ரத்து செய்தது. 

ஐ. என்.எக்ஸ் முறைகேடு வழக்கில் ப. சிதம்பரம் தொடர்பான அனைத்து  ஆவணங்களையும் உச்ச நீதி மன்றத்தில் அமலாக்க துறை தாக்கல் செய்தது. மேலும் இதற்கு முன் அவரிடம் நடத்த பட்ட விசாரணை விவரங்கள் மற்றும் கேள்வி பதில் விவரங்கள்அனைத்தையும் சீலிட்ட கவரில் தாக்கல் செய்யப் பட்டன.   

மனுவை விசாரித்த நீதிபதிகள் முன் ஜாமீன் என்பது அடிப்படை உரிமை இல்லை என்றும் விசாரணை அமைப்புகளுக்கு ப.சிதம்பரம் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.  உச்ச நீதி மன்றம் முன் ஜாமீன் மனுவை நிராகரித்ததால் அமலாக்கத்துறை ப. சிதம்பரம் அவர்களை  கைது செய்யும் வாய்ப்பு உள்ளது