போலீஸ் ஸ்டேஷன் அருகிலேயே ரவுடி கும்பலை போல அடித்து கொண்ட பள்ளி மாணவர்கள்?! அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்கள்!

 

போலீஸ் ஸ்டேஷன் அருகிலேயே ரவுடி கும்பலை போல அடித்து கொண்ட பள்ளி மாணவர்கள்?! அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்கள்!

மேல்நிலைப் பள்ளியில் அங்கு படிக்கும் பள்ளி மாணவர்கள் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கி கொண்டுள்ளனர்.

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் அங்கு படிக்கும் பள்ளி மாணவர்கள் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கி கொண்டுள்ளனர். இதற்கான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ttn

ரவுடி கும்பலை போல மோதிக்கொள்ளும் இந்த வீடியோ வெளியாகி பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதை கண்ட பெற்றோர்களும், ஆசிரியர்களும் அதிர்ச்சி உறைந்துபோய் உள்ளனர். இந்த வீடியோவானது போலீசாரின் கவனத்துக்குச் செல்ல அவர்களை இதுகுறித்த விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.இருப்பினும்  மாணவர்களுக்கிடையே ஆன தகராறு காவல் நிலையத்திற்கு பக்கத்தில் தான் நடந்தது என்றும் சொல்லப்படுகிறது. 

ttn

இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்  என சமூக ஆர்வலர்கள் கருத்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது.