போலீஸ் – வணிகர் இடையே மோதல்… தமிழக அரசு தெளிவுபடுத்த டிடிவி தினகரன் கோரிக்கை!

 

போலீஸ் – வணிகர் இடையே மோதல்… தமிழக அரசு தெளிவுபடுத்த டிடிவி தினகரன் கோரிக்கை!

சென்னையில் கடைகளைத் திறப்பது தொடர்பாக போலீசாருக்கும் வணிகர்களுக்கும் இடையே மோதல் ஏற்படுவதாகவும், அரசு கடைகளைத் திறப்பது தொடர்பாக தெளிவுபடுத்த வேண்டும் என்றும் டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் கடைகளைத் திறப்பது தொடர்பாக போலீசாருக்கும் வணிகர்களுக்கும் இடையே மோதல் ஏற்படுவதாகவும், அரசு கடைகளைத் திறப்பது தொடர்பாக தெளிவுபடுத்த வேண்டும் என்றும் டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

chennai-shops

அ.ம.மு.க பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள ட்வீட்டில், “தமிழகம் முழுவதும் கடைகளைத் திறக்க அரசு வெளியிட்ட அறிவிப்பு தெளிவாக இல்லாததால், சென்னை உள்ளிட்ட பல இடங்களில் வணிகர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்படுவதாக செய்திகள் வருகின்றன.

‘அரசு திறக்கச்சொல்கிறது; காவல்துறையினர் மூடச் சொல்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது?’ – என்று வணிகர்கள் குழப்பமடைந்துள்ளனர். இது குறித்து தமிழக அரசு உடனடியாக தெளிவுப்படுத்தி, தேவையற்ற சட்டம் – ஒழுங்கு பிரச்னைகளைத் தவிர்க்க வேண்டும்.

மேலும் அந்தந்தப் பகுதிகளிலுள்ள வணிகர்களுக்கும்,அரசு நிர்வாகத்திற்கும், காவல்துறைக்கும் இடையில் முழுமையான ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுத்திட வலியுறுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.