போலீஸ் பாதுகாப்புடன் நாளை டாஸ்மாக் திறப்பு: வயதுக்கேற்ப நேர கட்டுப்பாடு இதோ!

 

போலீஸ் பாதுகாப்புடன் நாளை டாஸ்மாக் திறப்பு: வயதுக்கேற்ப நேர கட்டுப்பாடு இதோ!

எண்ணிக்கை 3550லிருந்து 4058 ஆக உயா்ந்துள்ளது. சென்னையை பொறுத்தவரையில்  2008பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் பொதுமுடக்கம் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.  அதன்படி மே 17 ஆம் தேதி வரை  ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்துள்ளனர்.  தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3550லிருந்து 4058 ஆக உயா்ந்துள்ளது. சென்னையை பொறுத்தவரையில்  2008பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனிடையே தமிழக அரசுக்கு அதிகளவு வருவாய் ஈட்டி தரும்  மதுக்கடைகள் கிட்டதட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக மூடப்பட்டுள்ளன. இதனால் குடிமகன்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்களும் அரங்கேறின. இதை தொடர்ந்து தமிழகத்தில் நாளை (மே 7)   முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்தியத் தயாரிப்பு அயல்நாட்டு மதுபானத்தின் மீது விதிக்கப்படும் ஆயத்தீர்வை வரியினை தமிழக அரசு 15% உயர்த்தியுள்ள காரணத்தினால், நாளை முதல் மதுபானம் விலை உயரும் என்று டாஸ்மாக்  நிறுவனம் தெரிவித்துள்ளது. 

tt

இந்நிலையில்  டாஸ்மாக்  நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “நாளை டாஸ்மாக் திறப்பின் படி வயது வாரியாக நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை என்றும் 40-50 வயதுக்குட்பட்டவர்களுக்கு மதியம் 1 மணி முதல் மதியம் 3 மணி வரையும், 40 வயதுக்குட்பட்டவர்களுக்கு மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதி என்று அறிவித்துள்ளது. மேலும் நாளை ஒவ்வொரு டாஸ்மாக் கடைகள் முன்பும் 2 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.