போட்டி போட்டு கொண்டு யோகா செய்த மோடியின் விழுதுகள்! வைரலாகும் புகைப்படம்!
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் தமிழிசை ஆகியோர் யோகாசனம் செய்து வியக்க வைத்தனர்.
சென்னை: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் தமிழிசை ஆகியோர் யோகாசனம் செய்து வியக்க வைத்தனர்.
உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள பிரபாத் தாரா பள்ளி மைதானத்தில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அதில் பேசிய பிரதமர் மோடி, ‘யோகா செய்வதன் மூலம் அமைதி கிடைக்கிறது. யோகா அனைவருக்குமானது. உலகம் முழுவதும் அதிகரித்து வரும் இதயம் தொடர்பான நோய்களை யோகா தடுக்கும். உலகுக்கு இந்தியா அளித்த மிகப்பெரிய கொடை யோகா. ஏழை மக்களின் வாழ்வில் ஒரு அங்கமாக மாற்ற விரும்புகிறோம்’ என்று குறிப்பிட்டார்.
இந்நிலையில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நடிகை தன்ஷிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டு யோகாசன செய்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், தமிழக பள்ளிகளில் வாரத்துக்கு ஒரு நாள் யோகா பயிற்சி அளிக்கத் திட்டம் உள்ளது என்றார். இதே போல் தமிழிசை பேசும் போது, யோகா மதம் சார்ந்தது கிடையாது; உடல் நலம் மற்றும் மனநலம் சார்ந்தது என்று கூறினார்.
தமிழிசையும். அமைச்சர் செங்கோட்டையனும் தன்ஷிகாவுக்கு டஃப் கொடுக்கும் விதத்தில் தம் கட்டி யோகாசனம் செய்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.