பொள்ளாச்சி விவகாரம்: சிபிசிஐடி விசாரணையில் மேலும் ஒருவர் அதிரடி கைது!

 

பொள்ளாச்சி விவகாரம்: சிபிசிஐடி விசாரணையில் மேலும் ஒருவர் அதிரடி கைது!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் மணிவண்ணன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் மணிவண்ணன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

pollachi

பொள்ளாச்சியில் இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாக பதிவு செய்து அவர்களை மிரட்டி வந்துள்ள சம்பவம் தமிழகத்தையே குலைநடுக்க வைத்தது.  இந்தச் சம்பவம்  தொடர்பாகத் திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், சபரி ராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக முதலில் கோவை மாவட்ட போலீசார் விசாரித்தாலும், தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரிக்கின்றனர். இதனால் கைது செய்யப்பட்ட நபர்களின் இல்லங்கள், பண்ணை வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர். இதில் செல்போன், பென் டிரைவ் உள்ளிட்டவை சிக்கின. 

pollachi

இதை தொடர்ந்து, நீதிமன்றம் அனுமதியோடு, காவலில் எடுக்கப்பட்ட திருநாவுக்கரசிடம் சிபிசிஐடி போலீசார், விசாரித்து வந்தனர்.  நான்கு  நாட்களாக நடந்த இந்த விசாரணை கடந்த 18 ஆம் தேதியன்று நிறைவடைந்தது. குற்றவாளிகளிடம் வாங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் பல பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர். 

pollachi

இந்நிலையில் திருநாவுக்கரசு அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், 5-வது நபராக மணிவண்ணன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிபிசிஐடி அவரை வரும்  வெள்ளிக்கிழமை வரை காவலில் எடுத்து  விசாரிக்க உள்ளது. 

nagaraj

முன்னதாக  திமுக மாவட்டச் செயலர் மகன் மணிமாறன், பார் நாகராஜ் ஆகியோருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதையும் வாசிக்க: ”பிரபு, சத்யராஜ் உன்னத் தடவுனதெல்லாம் மறந்துபோச்சா கஸ்தூரி?”… விளாசும் லதா எம்.ஜி.ஆர்…