பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்; தமிழிசை வலியுறுத்தல்
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சரியான விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை வலியுறுத்தியுள்ளார்
சென்னை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சரியான விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை வலியுறுத்தியுள்ளார்.
பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பல பெண்களை பொள்ளாச்சியில் ஒரு கும்பல் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியிருக்கும் சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. அந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி நெஞ்சை பதைபதைக்க வைத்திருக்கிறது.
இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இதில், ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களுக்கு தொடர்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சரியான விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை வலியுறுத்தியுள்ளார்.
பொள்ளாச்சியில் நடைபெற்றதாக வெளிவரும் தகவல்கள்அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது,பெண்ணினம் கசக்கப்படுவதையும்..நசுக்கப்படுவதையும்..துளியும்,ஏற்றுக்கொள்ள முடியாதஒன்று,பாதிக்கப்பட்டபெண்கள் பாதுகாக்கப்படவேண்டும,சரியானவிசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்,சிறப்பு புலனாய்வு வேண்டும்
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) March 11, 2019
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “பொள்ளாச்சியில் நடைபெற்றதாக வெளிவரும் தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது, பெண்ணினம் கசக்கப்படுவதையும், நசுக்கப்படுவதையும், துளியும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. பாதிக்கப்பட்டபெண்கள் பாதுகாக்கப்படவேண்டும. சரியானவிசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். சிறப்பு புலனாய்வு விசாரணை நடத்தப்பட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.