பொள்ளாச்சி காமூகர்களை அடித்து உதைத்த பொதுமக்கள்: வைரலாகும் வீடியோ!

 

பொள்ளாச்சி காமூகர்களை அடித்து உதைத்த பொதுமக்கள்: வைரலாகும் வீடியோ!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளைப் பொதுமக்கள் விசாரிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளைப் பொதுமக்கள் விசாரிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

நெஞ்சை உலுக்கும் பொள்ளாச்சி விவகாரம்: 

abuse ttn

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சமூகவலைதளங்களில் தீவிரமாக இயங்கும் பெண்களை டார்கெட் செய்து  பெண்கள் பெயரில் பேக் ஐடி தயாரித்து பெண்களுக்கு வலைவீசியுள்ளனர் முதலில் உடல் சம்பந்தமான இச்சை கேள்விகளைக் கேட்பார்கள். பெண்களும் நம்மிடம் பேசுவது பெண் தான் என்பதை நம்பி அந்தரங்க விஷயங்களைப் பகிர்ந்து கொண்ட பின் அதை வைத்து மிரட்டி அவர்களைப் பணிய வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது இந்த கும்பல். இப்படி 40ற்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாக பதிவு செய்து மிரட்டி வந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அனைவரையும் பதற வைத்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று  பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.

குற்றவாளிகளை அடித்து உதைத்த பொதுமக்கள்:

 

இது குறித்து தகவல் தெரிவித்துள்ள காவல்துறையினர் 2 பெண்கள் புகார் அளித்துள்ளதாகவும், 4 வீடியோக்கள் மட்டுமே இருப்பதாகவும் தெரிவித்தனர். ஆனால் குற்றவாளி இருவரை பொதுமக்கள் விசாரிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதில், சபரி, மற்றும் திருநாவுக்கரசு ஆகிய குற்றவாளிகளைப் பொதுமக்கள் தாக்கி வீடியோ குறித்து விசாரிக்கப்படுவதும், அதில் பல பெண்களை வீடியோ எடுத்திருப்பதாகக் குற்றவாளிகள் ஒப்புக்கொள்வதும் பதிவாகியுள்ளது. 

வலுக்கும் கோரிக்கை:

 

குற்றவாளிகளின் ஒப்புதல் வாக்குமூலமான இந்த வீடியோவை ஆதாரமாகக் கொண்டு விசாரணையை மேலும் தீவிரப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வருகின்றது.