பொறுத்தது போதும்… ஊரடங்கையும் மீறி வீட்டைவிட்டு வெளியேறி காதலனை மணந்த வீர மாணவி!!

 

பொறுத்தது போதும்… ஊரடங்கையும் மீறி வீட்டைவிட்டு வெளியேறி காதலனை மணந்த வீர மாணவி!!

திருச்சியை சேர்ந்த ரவி என்பவரின் மகன் வினோத், ஐஐடி முடித்துவிட்டு திருச்சியிலேயே வேலைப்பார்த்துவருகிறார். இவருக்கும் திருச்சி ஜீவா நகரைச் சேர்ந்த ஜீவிதா என்ற பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

திருச்சியை சேர்ந்த ரவி என்பவரின் மகன் வினோத், ஐஐடி முடித்துவிட்டு திருச்சியிலேயே வேலைப்பார்த்துவருகிறார். இவருக்கும் திருச்சி ஜீவா நகரைச் சேர்ந்த ஜீவிதா என்ற பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஜீவிதா திருச்சியிலுள்ள தனியார் கல்லூரியில் இறுதியாண்டு படித்துவருகிறார். கடந்த ஒருவருடமாக இருவரும் காதலித்துவரும் நிலையில், ஜீவிதாவின் வீட்டுக்கு காதல் விவகாரம் தெரியவந்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ஜீவிதாவின் பெற்றோர் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து அவருக்கு திருமணம் செய்துவைக்க ஏற்பாடு செய்தனர். 

திருமணம்

இதற்கிடையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் செய்வதறியாது திகைத்த ஜீவிதா வீட்டைவிட்டு வெளியேறி வினோத் வீட்டிற்கு சென்றுள்ளார். சிந்தாமணியிலிருக்கும் கோவிலில் இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளனர். மகளுக்கு திருமணம் நடந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்த ஜீவிதாவின் பெற்றோர் காவல்துறையினரிடம் தகவல் அளித்தனர். காவல்துறை நடத்திய விசாரணையில் ஜீவிதா, தன் காதலுடன் தான் செல்வேன், பெற்றோருடன் செல்ல விரும்பவில்லை என தெரிவித்துள்ளார். அவர் மேஜர் என்பதால் காவல்துறையினர் வினோத்திடனே அனுப்பிவைத்தனர்.