பொய் என்றால் என்னவென்றே தெரியாது! முதல்வரின் உருக்கமான அதிரடி பேச்சு!

 

பொய் என்றால் என்னவென்றே தெரியாது! முதல்வரின் உருக்கமான அதிரடி பேச்சு!

தேர்தல் நெருங்கிவிட்டால் அரசியல்வாதிகளுக்கு கொண்டாட்டம் தான். இந்நிலை தமிழகத்தில் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதுமே காட்சிகள் இப்படித்தான் அரங்கேறி வருகின்றன. உருக்கமான பேச்சு, பொதுமக்களுடன் பரஸ்பரம் அன்பு செலுத்துவதும், அவர்களின் பிரச்சனைகளை காது கொடுத்து கேட்பதுமாக தேர்தலை திருவிழா போன்றே ஒவ்வொரு மாநிலத்திலும் அரசியல் தலைவர்கள் அணுகுகிறார்கள். 

தேர்தல் நெருங்கிவிட்டால் அரசியல்வாதிகளுக்கு கொண்டாட்டம் தான். இந்நிலை தமிழகத்தில் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதுமே காட்சிகள் இப்படித்தான் அரங்கேறி வருகின்றன. உருக்கமான பேச்சு, பொதுமக்களுடன் பரஸ்பரம் அன்பு செலுத்துவதும், அவர்களின் பிரச்சனைகளை காது கொடுத்து கேட்பதுமாக தேர்தலை திருவிழா போன்றே ஒவ்வொரு மாநிலத்திலும் அரசியல் தலைவர்கள் அணுகுகிறார்கள். 

yediruppa

கர்நாடக சட்டசபையில் வரும் மாதம் 5ம் தேதி, காலியாக உள்ள 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி அந்ஹ்ட தொகுதிகளில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தினம் தினம் உருக்கமான பேச்சு, காரசாரமான விவாதம் என்று களை கட்டுகிறது கர்நாடக தேர்தல். இந்நிலையில், நேற்று கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா பல்லாரி மாவட்டம் விஜயநகர் தொகுதியில் பிரசாரம் செய்தார். அங்கு கமலாபுரைன் என்ற இடத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அவர் பேசும் போது, எனது வாழ்க்கையில் பொய் என்றால் என்னவென்றே எனக்கு தெரியாது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 22 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று நான் கூறினேன். எனது இந்த கருத்தை மக்கள் நம்பவில்லை. ஆனால் அந்த தேர்தலில் பா.ஜனதா 25 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 17 எம்.எல்.ஏ.க்களில், முதலில் ராஜினாமா செய்தவர் ஆனந்த்சிங். கூட்டணி ஆட்சி காலத்தில் தொகுதியில் வளர்ச்சி பணிகள் நடைபெறாததால் அதிருப்தி அடைந்து பதவியை ராஜினாமா செய்தார். அவர் இந்த தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக போட்டியிட்டுள்ளார். அவரை வெற்றி பெற செய்யுங்கள். அவர் மந்திரியாக பதவி ஏற்று, இந்த தொகுதியின் வளர்ச்சிக்கு பாடுபடுவார் என்று மிக உருக்கமாக பேசினார் முதல்வர் எடியூரப்பா.