பொன்னியின் செல்வன்: ஐஸ்வர்யா ராய்க்கு பிறகு மேலும் இணைந்த இரு நாயகிகள்?
பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராயைத் தொடர்ந்து மேலும் இரு நாயகிகள் இணைந்துள்ளனர்.
சென்னை: பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராயைத் தொடர்ந்து மேலும் இரு நாயகிகள் இணைந்துள்ளனர்.
சரித்திர நூல்களில் செல்வாக்கு மிக்க படைப்பாகக் கருதப்படுவது கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’.வரலாற்று மிக்க இந்த நாவலைக் காட்சி வடிவத்துக்கு மாற்ற மணிரத்னம் இறங்கியுள்ளார். இதில் இந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான விக்ரம் ,நயன்தாரா, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், கார்த்தி, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.
இந்த நிலையில் இதில் ஐஸ்வர்யா ராய் நடிக்கவுள்ளதாகப் பிரபல கடை திறப்பு விழாவுக்காக வந்த சமயத்தில் கூறினார். தற்போது அவரை தொடர்ந்து மீண்டும் இரண்டு நாயகிகள் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆம்… அவர்கள் வேறுயாரும் இல்லை அமலா பால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது மணிரத்னம் பொன்னியின் செல்வனின் ஆரம்பக்கட்ட வேலையில் பிஸியாக இருப்பதால், அது முடிந்த பிறகு இதில் நடிக்கவுள்ள நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.