பேரிடர் பாதித்த மாவட்டங்களாக டெல்டாவை அறிவிக்க வேண்டும்: பாரதிராஜா வலியுறுத்தல்

 

பேரிடர் பாதித்த மாவட்டங்களாக டெல்டாவை அறிவிக்க வேண்டும்: பாரதிராஜா வலியுறுத்தல்

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என திரைப்பட இயக்குநர் பாரதிராஜா வலியுறுத்தியுள்ளார்.

தஞ்சாவூர்: கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என திரைப்பட இயக்குநர் பாரதிராஜா வலியுறுத்தியுள்ளார்.

கஜா புயலா நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் நிலைகுலைந்து இருக்கிறது. அங்கு அரசு மட்டுமின்றி தன்னார்வலர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், இயக்குநர்கள் அமீர், வெற்றிமாறன், பாரதிராஜா ஆகியோர் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள தஞ்சை மாவட்ட பகுதிகளுக்கு சென்று நிவாரண பொருட்களை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கினர். அதனை தொடர்ந்து பாரதிராஜா செய்தியார்களிடம் பேசுகையில்,

புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா  மாவட்டங்களை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும். நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்ய வேண்டும்.  தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தி இருந்தால் கணக்கெடுக்கும் பணி விரைவாக முடிந்திருக்கும். மின்வாரிய ஊழியர்களுடன் ராணுவத்தினரையும் மின் சீரமைப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றார்.