‘பேராசிரியர் அன்பழகனின் மறைவால் வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்’ : டிடிவி தினகரன்

 

‘பேராசிரியர் அன்பழகனின் மறைவால் வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்’ : டிடிவி தினகரன்

உடல்நலக் குறைவால் கடந்த 10 நாட்களுக்கு மேலாக திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

உடல்நலக் குறைவால் கடந்த 10 நாட்களுக்கு மேலாக திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து வந்தனர். கடந்த இரண்டு நாட்களாக அவருக்குச் சுவாசம் கொடுக்கப்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

TTN

இந்நிலையில் இன்று காலை பேராசிரியர் க.அன்பழகன் காலமானார். மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞருக்குப் பிறகு மு.க ஸ்டாலினுக்கு ஆறுதல் கூறவும், ஆலோசனை வழங்கவும் தூணாக இருந்த அன்பழகனின் மறைவு ஸ்டாலினை பெரும் வேதனைக்குள்ளாகியுள்ளது. கீழ்ப்பாக்கத்தில் வைக்கப்பட்டுள்ள அன்னாரின் உடலுக்குப் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

ttn

இந்நிலையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேராசிரியரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துப் பதிவிட்டுள்ளார். அதில், தி.மு.க பொதுச்செயலாளர் பெரியவர் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் காலமான செய்தி அறிந்து வருத்தமுற்றேன். தமிழகத்தின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான அன்னாரது மறைவால் வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.