‘பேரறிவாளன் வீட்டுக்கு வந்தது முழு நிம்மதி’ : தாயார் அற்புதம்மாள் உருக்கம்!

 

‘பேரறிவாளன் வீட்டுக்கு வந்தது முழு நிம்மதி’ : தாயார் அற்புதம்மாள் உருக்கம்!

பேரறிவாளனின் தந்தை குயில் தாசனுக்கு உடல் நிலை சரியில்லாததால் கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2 மாத பரோலில் வெளியே வந்தார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 28 ஆண்டுகளாகச் சிறையிலிருந்து வரும் பேரறிவாளனின் தந்தை குயில் தாசனுக்கு உடல் நிலை சரியில்லாததால் கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2 மாத பரோலில் வெளியே வந்தார்.

Parole

அதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டும் அவரின் தந்தைக்கு உடல் நிலை சரியில்லாததால் அவரின் தாயார் அற்புதம்மாள் பரோல் வழங்கும் படி தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்தார். அதற்குத் தமிழக அரசு ஒப்புதல் அளித்ததால் இன்று பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்து ஜோலார்பேட்டையில் இருக்கும் அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். 

Perarivalan

இது குறித்துப் பேசிய அவரது தாயார், ‘பேரறிவாளன் பரோலில் வந்திருப்பது பெரும் மகிழ்ச்சி. அவனது வாழ்நாள் சிறையிலேயே முடிந்து விட்டது. 27 ஆண்டுகள் ஆகிவிட்டதால் பேரறிவாளனையும் அவருடன் கைது செய்யப்பட்ட 6 பேரையும் விடுவிக்க அரசு உரிய நடவடிக்கையை விரைவில் எடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

Mother

பேரறிவாளன் நிரந்தரமாக வெளியே வந்தால் தான் அவரது தந்தை குணமடைவார். அவன் விரைவில் வெளியே வர வேண்டும். எனது கோரிக்கையை ஏற்றுப் பேரறிவாளனுக்கு ஒரு மாத பரோல் வழங்கியதற்காகத் தமிழக அரசுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.