பேரறிவாளனின் தந்தைக்கும் பேரறிவாளனுக்கும் ஒரே மருத்துவமனையில் சிகிச்சை !

 

பேரறிவாளனின் தந்தைக்கும் பேரறிவாளனுக்கும் ஒரே மருத்துவமனையில் சிகிச்சை !

உடல் நலக் குறைபாட்டுடன் இருக்கும் பேரறிவாளனின் தந்தை ஞானசேகரனுக்கு பல்வேறு கட்ட சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. 

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக இருக்கும் பேரறிவாளன் தனது தந்தையின் உடல் நலக்குறைபாடு காரணமாக இரண்டு முறை பரோலில் வெளியே வந்தார். கடந்த நவம்பர் மாதம் தமிழக அரசு அவருக்கு மீண்டும் ஒரு மாத பரோல் வழங்கியது. அதனால், அவர் தனது தந்தையின் சிகிச்சையை கவனித்து வருகிறார். உடல் நலக் குறைபாட்டுடன் இருக்கும் பேரறிவாளனின் தந்தை ஞானசேகரனுக்கு பல்வேறு கட்ட சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. 

ttn

அதில் அவருக்கு, சிறுநீர் கோளாறு, நரம்பு கோளாறு, ஆஸ்துமா மற்றும் நுரையீரல் கோளாறு, மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சனைகள் இருப்பதால், அவருக்கு ஏற்கனவே சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காகச் சென்னை காவேரி மருத்துவமனைக்குச் செல்லுமாறு பரிந்துரைத்தனர். அதன் படி, இன்று அவர் காவேரி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட உள்ளார். மேலும், பேரறிவாளனுக்கும்  ரத்த அழுத்தம், சிறுநீர் நோய் தொற்று, முடக்குவாதம் உள்ளிட்ட நோய்கள் இருப்பதால், சிறப்புச் சிகிச்சை பெறச் சென்னையில் மட்டுமே வாய்ப்பு இருப்பதால், அவருக்கும் இங்கேயே சிகிச்சை அளிக்கப் பரிந்துரைக்கப்பட்டது. அதனால், பேரறிவாளனின் தந்தைக்கும் பேரறிவாளனுக்கும் ஒரே மருத்துவமனையில் சிகிச்சை நடைபெற உள்ளது.