பேய் படம் போதும் இனி பாம்பு படம் தான்: ராகவா லாரன்ஸின் புதிய திட்டம்

 

பேய் படம் போதும் இனி பாம்பு படம் தான்: ராகவா லாரன்ஸின் புதிய திட்டம்

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் புதிய படத்திற்கான தலைப்பு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை: ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் உருவாகவிருக்கும்  புதிய படத்திற்கான தலைப்பு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. 

ராகவா லாரன்ஸ் நடித்து, இயக்கிய ‘காஞ்சனா 3’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வசூல் சாதனை படைத்தது வருகிறது. இருப்பினும் படம் ஏற்கனவே வெளிவந்த பாகத்தை சார்ந்தே உள்ளது. புதிதாக ஒன்றும் இல்லை என பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். 

kanchana

அதைத்தொடர்ந்து இப்படத்தில் நான்காவது பாகமும் வெளியாகும் என இந்த படத்தின் முடிவில் கார்டு மூலம் அறிவித்திருந்தார். இந்நிலையில் அதில் பேய்க்கு விடை கொடுத்துவிட்டு பாம்பை மையமாக வைத்து இயக்கவுள்ளார். காலபைரவர் என்று பெயரிட்டுள்ள இப்படத்தை 3டியில் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ‘காஞ்சனா 3’ படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் இந்த படத்தையும் தயாரிக்கவிருப்பதாகவும், விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்ப்பாக்கப்படுகிறது. 

மேலும் தொடர்ந்து வெளியான பேய் படங்கள் ஓடாததால் தான் லாரன்ஸ் பேய்யிலிருந்து, பாம்பிற்கு மாறினாரா? என்று சில நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். .