பேனருக்கு தடை: பேனர் வைக்க முயன்ற 4 பேர் கைது!

 

பேனருக்கு தடை: பேனர் வைக்க முயன்ற 4 பேர் கைது!

அதிமுக பிரமுகர் ஜெயகோபாலை  கிருஷ்ணகிரியில் உள்ள விடுதியில் நேற்று தனிப்படை காவல்துறையினர் பேனர் வைத்த குற்றத்திற்காக கைது செய்தனர்.  

பேனர் விழுந்து சுபஸ்ரீ இறந்த வழக்கில், பேனர் வைப்பதற்கு தடை விதித்தும் பேனர் வைத்தவர்களையும் கைது செய்யவும் கூறி உயர் நீதி மன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து பேனர் வைத்த அதிமுக பிரமுகர் ஜெயகோபால் தலைமைறைவானர். 

Jeyagopal

கிட்டத்தட்ட, 15 நாட்கள் போலீசார் பிடியில் சிக்காமல் கண்ணில் மண்ணைத் தூவிக்கொண்டு சுற்றிக் கொண்டிருந்த அதிமுக பிரமுகர் ஜெயகோபாலை  கிருஷ்ணகிரியில் உள்ள விடுதியில் நேற்று தனிப்படை காவல்துறையினர் பேனர் வைத்த குற்றத்திற்காக கைது செய்தனர்.  

Arrested

இந்நிலையில், பேனர் வைப்பது மற்றும் கொடி கட்டுவது போன்ற பணிகளில் ஈடுபட்டதால் பழனி, சுப்பிரமணி, சங்கர், லட்சுமிகாந்த் ஆகிய நான்கு பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.