‘பேட்ட’, ‘விஸ்வாசம்’ படங்களுக்கு எதிராக போலீஸில் புகார்

 

‘பேட்ட’, ‘விஸ்வாசம்’ படங்களுக்கு எதிராக போலீஸில் புகார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘பேட்ட’ மற்றும் தல அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படத்திற்கு எதிராக போலீஸில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘பேட்ட’ மற்றும் தல அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படத்திற்கு எதிராக போலீஸில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்தின் ‘பேட்ட’ திரைப்படமும் அஜித்தின் ‘விஸ்வாசம்’ திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜன.10ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ளது. இவ்விரு திரைப்படங்களின் டிக்கெட் முன்பதிவுகள் இன்று முதல் ஆரம்பமாகின்றன.

இந்நிலையில் அரசு விடுமுறை இல்லாத நாட்களில் வெளியாகும் இப்படங்கள் 6 காட்சிகள் திரையிடப்படவுள்ளதாக சமூக ஆர்வலர் தேவராஜன் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அவரது மனுவில், அரசு விடுமுறை இல்லாத நாட்களில் புதிய திரைப்படங்கள் ரிலீசானால், 4 காட்சிகள் மட்டுமே திரையிடப்பட வேண்டும் என்ற அரசாணை உள்ளது. ஆனால், சட்டத்திற்கு புறம்பாக ‘பேட்ட’, ‘விஸ்வாசம்’ திரைப்படங்கள் 6 காட்சிகள் திரையிடப்படவுள்ளதாக ஆன்லைனில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அரசாணையை மீறி 6 காட்சிகள் திரையிடப்பட்டால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். அப்படி விதியை மீறும் திரையரங்குகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஏற்கனவே 6 காட்சிகளுக்கு டிக்கெட் முன்பதிவு வசூல் செய்த கட்டணங்களை திருப்பி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேவராஜ் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.