பேட்ட, விஸ்வாசம் திரைப்படங்களின் வசூல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

 

பேட்ட, விஸ்வாசம் திரைப்படங்களின் வசூல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மதுரை மாவட்டத்தில் ஜனவரி 10 முதல் 17 வரை பேட்ட, விஸ்வாசம் படங்கள் வெளியான திரையரங்குகளின் தினசரி வசூல் அறிக்கையைத் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

மதுரை: மதுரை மாவட்டத்தில் ஜனவரி 10 முதல் 17 வரை பேட்ட, விஸ்வாசம் படங்கள் வெளியான திரையரங்குகளின் தினசரி வசூல் அறிக்கையைத் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான  பேட்ட, தல அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவான விஸ்வாசம் ஆகிய இரு திரைப்படங்களும் உலகம் முழுவதும் கடந்த 10-ம் தேதி வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.

இதற்கிடையே, மதுரை மாவட்டத்தில் இப்படங்களுக்கு  கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரையடுத்து, மதுரை மாவட்டத்தில் இரு திரைப்படங்களும் ஓடும் 22 தியேட்டர்களில் ஆய்வு செய்ய குழுக்கள் அமைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

இது தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரை மாவட்டத்தில் கூடுதல் கட்டணம் வசூலித்த திரையரங்குகள் தொடர்பாக 21 ஆணையர்களும் ஒருங்கிணைந்த அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், ஜனவரி 10 முதல் 17 வரை பேட்ட, விஸ்வாசம் படங்கள் வெளியான திரையரங்குகளின் தினசரி வசூல் அறிக்கையைத் தாக்கல் செய்யவும் மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.