‘பேட்ட’ மாஸ் காட்சிகளில் நடித்தது எப்படி? சூப்பர் ஸ்டார் ஓபன் டாக்!

 

‘பேட்ட’ மாஸ் காட்சிகளில் நடித்தது எப்படி? சூப்பர் ஸ்டார் ஓபன் டாக்!

‘பேட்ட’ படத்தின் மாஸ் காட்சிகளில் தன்னை உசுப்பேற்றி, உசுப்பேற்றி நடிக்க வைத்தார்கள் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

சென்னை: ‘பேட்ட’ படத்தின் மாஸ் காட்சிகளில் தன்னை உசுப்பேற்றி, உசுப்பேற்றி நடிக்க வைத்தார்கள் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

சன் பிக்சர் தயாரிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் பேட்ட திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

rajini

இந்நிலையில், அமெரிக்காவில் ஓய்வை முடித்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘ பேட்ட படம் ரசிகர்களுக்குப் பிடித்திருக்கிறது என்று கேள்விப்பட்டேன். மிகவும் சந்தோஷம். ரசிகர்களின் சந்தோஷமே எனது சந்தோஷம். பேட்ட சிறப்பாக வந்ததற்கு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தான் காரணம். மாஸ் காட்சிகளில் என்னை உசுப்பேற்றி, உசுப்பேற்றி நடிக்க வைத்தார்கள்’ என்றார்.