‘பேட்ட’ குறித்து ரஜினி வாட்ஸ்அப்பில் சொன்ன மெசேஜ்: கொண்டாடும் ரசிகர்கள்!

 

‘பேட்ட’ குறித்து ரஜினி வாட்ஸ்அப்பில் சொன்ன மெசேஜ்: கொண்டாடும் ரசிகர்கள்!

பேட்ட படம் குறித்த  வாழ்த்துச் செய்திக்கு நடிகர் ரஜினிகாந்த் வாட்ஸ்-அப்பில் பதிலளித்துள்ளார்.

சென்னை: பேட்ட படம் குறித்த  வாழ்த்துச் செய்திக்கு நடிகர் ரஜினிகாந்த் வாட்ஸ்-அப்பில் பதிலளித்துள்ளார்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் – ரஜினி கூட்டணியில் உருவாகியுள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, சசிகுமார், த்ரிஷா, சிம்ரன், நவாசுதீன் சித்தக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். கடந்த 10-ம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 80களில்  கண்ட ரஜினியை மீண்டும் ரசிகர்கள் திரையில் வாய்ப்பு கிடைத்துள்ளதாக ரஜினி ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர். 

rajini

இந்நிலையில் பேட்ட படம் குறித்து பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியன், ரஜினிகாந்துக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். அதில் ‘சார். திருப்பூர் சுப்பிரமணியம் பேசுறேன். ரொம்ப அருமையான படம் சார். ஆடியன்ஸ் ரொம்ப நல்லா ரசிக்கிறாங்க. நல்ல ஒரு பெரிய ஹிட்டான படம். பொங்கலுக்கு ரொம்ப நல்ல படம் கொடுத்துருக்கீங்க. வாழ்த்துகள் சார்’ என்று கூறியுள்ளார்.

 

இதற்கு வாட்ஸ் அப்பில்  பதிலளித்துள்ள  ரஜினி, ‘ரொம்ப நன்றி திருப்பூர் சுப்பிரமணியம் சார். ரொம்ப மகிழ்ச்சி. நீங்கள் சொன்னா மொத்த இன்டஸ்ட்ரியுமே சொன்ன மாதிரி. ரொம்ப சந்தோஷம் உங்கள் வாயால் கேட்பதற்கு. ரொம்ப நன்றிங்க’ என்று கூறியுள்ளார். இந்த ஆடியோ பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.