பெற்றோரை கொன்றுவிடுவதாக மிரட்டி 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: காமுகன் கைது

 

பெற்றோரை கொன்றுவிடுவதாக மிரட்டி 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: காமுகன் கைது

பட்டினம்பாக்கத்தில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தேவராஜ் என்பவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ்கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

சென்னை: பட்டினம்பாக்கத்தில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தேவராஜ் என்பவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ்கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பட்டினம்பக்கம் சீனிவாசபுரம் பகுதியில் வசித்து வருபவர் அலெக்ஸ் (எ) தேவராஜ் (55). இவர் அதே பகுதியில் வசிக்கும் 9 வயது சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். 

இது குறித்து யாரிடமாவது தெரிவித்தால் தாய் மற்றும் தந்தையை கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார். இச்சம்பவம் நடந்து 20 நாட்கள் கழிந்த நிலையில் சிறுமிக்கு மீண்டும் தேவராஜ் பாலியல் தொந்தரவு கொடுக்க, இதனை சிறுமி தனது மூத்த சகோதரியிடம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சகோதரி பெற்றோரிடம் கூற அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் பட்டினம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.புகாரின் அடிப்படையில் தேவராஜை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.