பெரிய விஞ்ஞானி என்று ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண மன்னன்! உண்மை தெரிந்து அதிர்ச்சி அடைந்த பி.எச்.டி மாணவி….

 

பெரிய விஞ்ஞானி என்று ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண மன்னன்! உண்மை தெரிந்து அதிர்ச்சி அடைந்த பி.எச்.டி மாணவி….

பெரிய விஞ்ஞானியை திருமணம் செய்து உள்ளோம் என்று சந்தோஷத்தில் இருந்த டெல்லி பெண், அந்த நபர் மோசடி பேர்வழி என்ற உண்மையை தெரிந்ததும் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

டெல்லியை சேர்ந்த பி.எச்.டி. மாணவி வித்யாவுக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஜிதேந்தர் சிங் என்பவர் அறிமுகம் ஆனார். பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டி.ஆர்.டி.ஓ.) பெரிய விஞ்ஞானியாக இருப்பதாகவும், உன்னை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் வித்யாவிடம் ஜிதேந்தர் சிங் கூறி இருக்கிறார். பெரிய விஞ்ஞானி தன்னை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார் என்ற சந்தோஷத்தில் வித்யாவும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தார்.

டி.ஆர்.டி.ஓ.

இதனையடுத்து அவர்களது திருமணம் நல்லதொரு நாளில் சிறப்பாக நடந்தேறியது. சில நாட்கள் சென்றதும் ஜிதேந்தர் சிங் மீது வித்யாவுக்கு சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து ஜிதேந்தர் சிங் குறித்து வித்யா விசாரிக்க தொடங்கினார். அதில் கிடைத்த தகவல்கள் அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஜிதேந்தர் சிங் வேலை இல்லாதவர் மற்றும் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்ற உண்மை வித்யாவுக்கு தெரிந்தது.

துவாரகா காவல் நிலையம்

இதனையடுத்து, பெரிய விஞ்ஞானி என்று போலி ஐ.டி. கார்டுகளை காட்டி மற்றும் ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக விதேந்தர் சிங் மீது துவாரகா வடக்கு காவல் நிலையத்தில் வித்யா புகார் கொடுத்தார். வழக்கை பதிவு செய்த போலீசார் அதன் அடிப்படையில் விதேந்தரை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.