பெரியார் குறித்த பா.ஜ.கவின் சர்ச்சை ட்வீட்டுக்கு, கட்சி நடவடிக்கை எடுக்கும் : சி.பி. ராதாகிருஷ்ணன் பேட்டி

 

பெரியார் குறித்த பா.ஜ.கவின் சர்ச்சை ட்வீட்டுக்கு, கட்சி நடவடிக்கை எடுக்கும் : சி.பி. ராதாகிருஷ்ணன் பேட்டி

பெரியாரின் நினைவு தினத்தையொட்டி நேற்று பா.ஜ.க அதன் அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்தில் பெரியாரை பற்றி சர்ச்சைக்குரிய ட்வீட் ஒன்று வெளியிட்டது.

நேற்று பெரியாரின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பெரியாருக்கு மரியாதை செலுத்தினர். அவரது நினைவு தினத்தையொட்டி நேற்று பா.ஜ.க அதன் அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்தில் பெரியாரை பற்றி சர்ச்சைக்குரிய ட்வீட் ஒன்று வெளியிட்டது.  அதற்கு, திமுக, அமமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. அந்த ட்வீட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால், ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது. 

ttn

இது குறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி. ராதாகிருஷ்ணன், “இறந்தவர்களை விமர்சிக்கும் பண்பாடு பா.ஜ.கவுக்கு கிடையாது. சர்ச்சைக்குரிய அந்த பதிவு குறித்து  கட்சியின் ஒழுங்கு  நடவடிக்கை குழு உரிய நடவடிக்கை எடுக்கும்” என்று தெரிவித்தார்.