பெரியாரால் வாழ்ந்துகொண்டிருக்கும் ரஜினி மகள்! நன்றி மறந்த ரஜினி!!

 

பெரியாரால் வாழ்ந்துகொண்டிருக்கும் ரஜினி மகள்! நன்றி மறந்த ரஜினி!!

துக்ளக் பத்திரிகையின் 50- வது ஆண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 14 ஆம் தேதி நடைபெற்றது.  இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய ரஜினி, பெரியார் தலைமையில் ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது, அந்த சிலைகளுக்கு  செருப்பு மாலை போடப்பட்டது என தெரிவித்திருந்தார்

துக்ளக் பத்திரிகையின் 50- வது ஆண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 14 ஆம் தேதி நடைபெற்றது.  இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய ரஜினி, பெரியார் தலைமையில் ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது, அந்த சிலைகளுக்கு  செருப்பு மாலை போடப்பட்டது என தெரிவித்திருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். ஆனால் ரஜினியோ நான் செய்தித்தாளில் வந்ததைதான் பேசினேன் இதற்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றும் தெரிவித்தார். பெரியாரை அவமதிப்பு செய்த ரஜினியின் கருத்து பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.  

ரஜினியின் மகள்

பெரியாரின் சீர்த்திருந்தங்களில் முக்கியமான ஒன்று மறுமணம்.  குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாரபட்சங்கள் இளம் வயதிலேயே அவரது கவனத்தைக் கவர்ந்தன. குழந்தைத் திருமணம் செய்து குழந்தையாக இருக்கும்போதே கணவனை இழந்து கைம்பெண்ணாகி வாழ்நாள் முழுவதும் கைம்பெண்ணாகவே வாழ்வதை எதிர்த்து குரல் கொடுத்தவர் பெரியார். கணவனை இழந்த பெண்கள் அல்லது கணவனை விட்டு பிரிந்த பெண்கள் மறுமணம் செய்துகொள்ளலாம் என்பதை சட்டப்பூர்வமாக்கிய பெருமையும் பெரியாரையே சேரும்..

அன்பழகன் ட்வீட்

இந்நிலையில் திமுக எம்எல்ஏவுமான ஜெ. அன்பழகன் தனது ட்விட்டரில், “ ரஜினி பொண்ணுக்கு இரண்டாவது கல்யாணம் யாரால் ஆச்சு ? தன் குடும்பத்துக்கே சீர்திருத்தம் செய்தவர் பெரியார்.. வரலாறு தெரியாமல் ரஜினிகாந்த் பேசக்கூடாது.. குருமூர்த்தி சொல்லி கொடுத்து ரஜினி பேசியிருப்பார்” என பதிவிட்டிருக்கிறார்.