பெண் வழக்கறிஞர் மீது வெடிகுண்டு வீசிச்சென்ற மர்ம கும்பல்! பழிக்குப்பழி..!!
சிந்தாதிரிப்பேட்டை ரிச்சி தெரு அருகில் பிளாக்கர் சாலையில் கேசினோ தியேட்டர் அருகே பெண் வழக்கறிஞர் மீது நாட்டு வெடிகுண்டு வீசியும் கொலை செய்ய முயற்சியும் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிந்தாதிரிப்பேட்டை ரிச்சி தெரு அருகில் பிளாக்கர் சாலையில் கேசினோ தியேட்டர் அருகே பெண் வழக்கறிஞர் மீது நாட்டு வெடிகுண்டு வீசியும் கொலை செய்ய முயற்சியும் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட வழக்கறிஞர் மலர்கொடி, அரசு ஸ்டான்லி பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்தவர் தோட்டம் சேகர். இவருடைய மனைவி வழக்கறிஞர் மலர். இவர் திருவல்லிக்கேணி அ.தி.மு.க இணை செயலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில், மலரும் அவரது மகன் அழகுராஜும் சென்னை ரிச்சி தெருவில் ஆட்டோவில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது அவர்கள் மீது மர்ம கும்பல் நாட்டு வெடிகுண்டை வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் ராயப்பேட்டை போலிஸாரை தாக்கிய வழக்கில் என்கவுண்டரில் ஆனந்த் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனந்தை அழகுராஜ் தான் போலிஸில் காட்டிக்கொடுத்தார். இதனால் ஆனந்தின் கூட்டாளிகள் அழகுராஜை பழிதீர்ப்பதற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதாக தெரிகிறது. தாக்குதல் நடத்திய கும்பலை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.