பெண் தொழிலதிபர் பாலியல் புகார்: முன்னாள் முதலமைச்சர் மீது வழக்குப்பதிவு!

 

பெண் தொழிலதிபர் பாலியல் புகார்: முன்னாள் முதலமைச்சர் மீது  வழக்குப்பதிவு!

கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி மற்றும் ஆலப்புழா தொகுதி எம்.பி., கே.சி.வேணுகோபால் ஆகியோர் மீது பாலியல் புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கேரளா: கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி மற்றும் ஆலப்புழா தொகுதி எம்.பி., கே.சி.வேணுகோபால் ஆகியோர் மீது பாலியல் புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் காங்கிரஸ் தலைவர் உம்மன் சாண்டி 2011 முதல் 2016 வரை முதல்வராக இருந்தார். அப்போது சோலார் பேனல் ஊழல் வழக்கில் சிக்கி கைதான தொழிலதிபர் சரிதா நாயர், உம்மன் சாண்டி மற்றும் ஆலப்புழா தொகுதி எம்.பி., கே.சி.வேணுகோபால் ஆகியோர் மீது பாலியல் புகார் தெரிவித்தார்.அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படாத நிலையில், விசாரணைக்கு மட்டுமே ஆஜராகி வந்தனர். 

இந்நிலையில் தற்போது இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சபரிமலை விவகாரத்தைத் திசை திருப்பவே இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கேரள காங்கிரஸார்  குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.