பெண்ணுக்கு வந்த காமவெறி, கொலைவெறியாகி குழந்தையை கொன்றது  …கள்ள காதலால் கல்லில் அடித்து குழந்தை கொலை  ..

 

பெண்ணுக்கு வந்த காமவெறி, கொலைவெறியாகி குழந்தையை கொன்றது  …கள்ள காதலால் கல்லில் அடித்து குழந்தை கொலை  ..

கேரளா கண்ணூர் பகுதியை சேர்ந்த சரண்யா என்ற 25 வயது பெண்  தனது கணவர் பிரனவை விட்டு பிரிந்து அம்மா வீட்டில் அவரது ஒரு வயது மகன் வியான்னுடன்  வாழ்ந்து வந்தார் .இதற்கிடையில் அவருக்கு வேறொரு நபருடன் ஏற்பட்ட தவறான தொடர்பின் விளைவாக அவர் மனதில் சாத்தான் குடிகொண்டது

கேரளாவில் ஒரு பெண் தான் பெற்ற ஒரு வயது குழந்தையை கள்ளக்காதல் தகராறில் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியடைய செய்துள்ளது .அவரை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றபோது பொதுமக்கள் அவரை தாக்கினர் .அவர்களிடமிருந்து போலீசார் அவரை மீட்டு சென்றனர் .

கேரளா கண்ணூர் பகுதியை சேர்ந்த சரண்யா என்ற 25 வயது பெண்  தனது கணவர் பிரனவை விட்டு பிரிந்து அம்மா வீட்டில் அவரது ஒரு வயது மகன் வியான்னுடன்  வாழ்ந்து வந்தார் .இதற்கிடையில் அவருக்கு வேறொரு நபருடன் ஏற்பட்ட தவறான தொடர்பின் விளைவாக அவர் மனதில் சாத்தான் குடிகொண்டது .ஆம் அவருடைய கள்ள காதலன் இந்த நம் காதலுக்கு குழந்தை இடையூராக இருப்பதாக கூறியிருக்கிறார் .அதனால் சென்ற ஞாயிற்று கிழமை அதிகாலை தனது கணவரை தன் வீட்டுக்கு வரசொல்லிவிட்டு அவரோடு தூங்கி கொண்டிருந்தார் .அதிகாலை 4 மணிக்கு குழந்தையை தூக்கிக்கொண்டு போய் கடற்கரையில் உள்ள ஒரு கல்லில் அடித்து மகனை கொன்றுவிட்டு ,உடலை அங்கேயே விட்டு விட்டு ,வீட்டுக்கு வந்து தூங்கினார் .
காலையில் எந்திரிச்சி அனைவருடன் சேர்ந்துகொண்டு இவரும் மகனை காணாதது போல தேடினார் .போலீசிலும் புகார் தந்தார் .போலீசார் விசாரணை மேற்கொண்டு சரண்யாவின் செல் போனை ஆராய்ந்த போது இவரின் கள்ளகாதல் விவகாரம் வெளியே தெரிந்தது .மேற்கொண்டு சரண்யாவை விசாரித்தபோது தான் மகனை கொன்ற விஷயத்தை ஒப்புக்கொண்டார் .
போலீசார் விசாரணைக்கு அவரை அழைத்துச்சென்றபோது பொதுமக்களால் தாக்கப்பட்டார் .பிறகு அவர்களிடமிருந்து அவரைக்காப்பாற்றி சரண்யாவை  கோர்ட்டில் ஆஜர்படுத்தினர் .