பெண்கள் மட்டுமல்ல ஆண்களுக்கும் ‘மீ டூ’ அனுபவம் இருக்கு: சின்மயி பகீர் தகவல்!

 

பெண்கள் மட்டுமல்ல ஆண்களுக்கும் ‘மீ டூ’ அனுபவம் இருக்கு: சின்மயி பகீர் தகவல்!

பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட பெண்களின் கதையை பகிர்ந்து வரும் பாடகி சின்மயி, பெண்கள் மட்டுமல்ல ஆண்களுக்கும் இந்த மீ டூ அனுபவம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

சென்னை: பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட பெண்களின் கதையை பகிர்ந்து வரும் பாடகி சின்மயி, பெண்கள் மட்டுமல்ல ஆண்களுக்கும் இந்த மீ டூ அனுபவம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை திரையுலகில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது. இந்நிலையில், பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து #MeToo என்ற ஹேஷ்டேக் மூலம் சமூக வலைத்தளங்களில் வெளிப்படையாக பேசி வருகின்றனர்

இந்தியா முழுவதும் இந்த மீ டூ பாலியல் அனுபவம் மீதான காரசார விவாதங்கள் அதிகரித்துள்ள நிலையில், தமிழ் திரையுலகில் பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து தொடங்கி பாடகர் கார்த்திக் வரை ஏராளமான பிரபலங்கள் மீது சுமத்தப்படும் பாலியல் புகார்களை அம்பலமாக்கி வருகிறார்.

இந்நிலையில், பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் சிறுவயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருப்பதாக சின்மயி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ஃபேஸ்புக் லைவில் பேசியுள்ள சின்மயி, இந்த மீ டூ மூலம் ஆண்களும் தங்களுக்கு நேர்ந்த மோசமான பாலியல் அனுபவம் குறித்து பேசத் தொடங்கியுள்ளனர்.

வைரமுத்து மீது சில பாடகிகள் புகார் கூற தயங்குகின்றனர். எனக்கு எந்த பயமும் இல்லை. யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. நான் பத்தினியா என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. 50 ஆண்டுகளுக்கு முன் நடந்த பாலியல் அனுபவம் குறித்து தற்போது பேசினால் என்ன தவறு. சமூக மாறி வருகிறது, மாற்றத்திற்கு தயாராகுங்கள்.

எனக்கு நடந்த பாலியல் அனுபவம் மட்டுமல்லாமல் மற்றவர்களின் குரலாய் இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்கள் வெட்கப்பட தேவையில்லை, பாலியல் துன்புறுத்தல் செய்தவர்கள் தான் வெட்கப்பட வேண்டும் என்று சின்மயி பேசியுள்ளார்.