பெண்கள் தூக்குவதற்கேற்ப தண்ணீர் கேன்களை வடிவமைக்கக் கோரி வழக்கு! இது நீதிமன்றமா வணிக வளாகமா? கடுப்பான நீதிபதிகள்!!

 

பெண்கள் தூக்குவதற்கேற்ப தண்ணீர் கேன்களை வடிவமைக்கக் கோரி வழக்கு! இது நீதிமன்றமா வணிக வளாகமா? கடுப்பான நீதிபதிகள்!!

சென்னையில் பயன்படுத்தப்பட்டு வரும் 20 லிட்டர் தண்ணீர் கேனின் வடிவத்தை மாற்றி அமைக்கும் வகையில் விதிகளை வகுக்கக்கோரி தீபா ஸ்ரீ என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

சென்னையில் பயன்படுத்தப்பட்டு வரும் 20 லிட்டர் தண்ணீர் கேனின் வடிவத்தை மாற்றி அமைக்கும் வகையில் விதிகளை வகுக்கக்கோரி தீபா ஸ்ரீ என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில் தண்ணீர் கேன்களை பெண்களால் தூக்கமுடியவில்லை. அதனால் வடிவத்தையும், அளவையும் மாற்றியமைக்க வேண்டும் என கோரியிருந்தார். 

water

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்குவந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர்கள் நினைக்கும் உத்தரவுகளை பெற நீதிமன்றம் வணிக வளாகம் அல்ல, மனுதாரர்களின் இது போன்ற கோரிக்கைகளை அரசிடம் கொண்டு போய் சேர்க்க  தபால் நிலையத்தை அணுகலாம் எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.