பெண்களை ஆசைவார்த்தை கூறி பலமுறை பலாத்காரம் செய்த நபர்: திருமணம் செய்ய 10 லட்சம் கேட்டு மிரட்டல்!

 

பெண்களை ஆசைவார்த்தை கூறி  பலமுறை பலாத்காரம் செய்த நபர்: திருமணம் செய்ய 10 லட்சம் கேட்டு மிரட்டல்!

பெண் ஒருவரைத் திருமணம் செய்வதாகக் கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

மும்பை :  பெண் ஒருவரைத் திருமணம் செய்வதாகக் கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

crime

மும்பையை சேர்ந்தவர் நிதின் சாம்ராவ் ஸெண்டே. இவர் தன்னுடன் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இவர்களது நட்பு ஒருக்கட்டத்தில் காதலாக மாற்றியுள்ளது. 38 வயதான அந்த பெண் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர். இவருக்கு குழந்தை ஒன்றும் இருந்துள்ளது.

rape

இந்நிலையில் நிதின் சாம்ராவ் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக  வாக்குறுதி அளித்துள்ளார். இதனால் அவரை நம்பிய அப்பெண்ணைத் திருமண ஆசைகாட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதைத் தொடர்ந்து நிதினை திருமணம் செய்து கொள்ள அப்பெண் வற்புறுத்தவே, தனக்கு 10 லட்சம் பணம் கொடுத்தால் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி மிரட்டியுள்ளார். 

arrest

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண், நிதினுக்கு 7 லட்சம் வரை கொடுத்துள்ளார். இருப்பினும் அப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள நிதின் மறுக்கவே அவர் மீது அப்பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அப்புகாரின் பேரில், நிதினை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் நிதின் ஏற்கனவே பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்ட  21 வயது பெண்ணை திருமண ஆசைகாட்டி பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் அவரை சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது. 

இதையும் வாசிக்க: சாமியார் கூறியதால் மகனை ஜீவசமாதியாக்கிய பெற்றோர்: சிறுவன் உயிருடன் இருந்ததாக பொதுமக்கள் புகார்!