பெட்ரோல் பங்க் மேலாளரை வெடிகுண்டு வீசி, அரிவாளால் வெட்டி படுகொலை செய்த கும்பல்.. விழுப்புரத்தில் நடந்த வெறிச்செயல் !

 

பெட்ரோல் பங்க் மேலாளரை வெடிகுண்டு வீசி, அரிவாளால் வெட்டி படுகொலை செய்த கும்பல்.. விழுப்புரத்தில் நடந்த வெறிச்செயல் !

இன்று காலை 11:30 மணி அளவில் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவதற்காக கார் ஒன்று வந்துள்ளது.

விழுப்புரம் அருகே உள்ள பனப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன்(50), தனது குடும்பத்துடன் ஆனந்தா நகரில் வசித்து வருகிறார். இவர் விழுப்புரம்-புதுச்சேரி சாலையில் உள்ள நாகலட்சுமி பெட்ரோல் பங்க்கில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இன்று வழக்கம் போலச் சீனிவாசன் வேலைக்குச் சென்றுள்ளார். இன்று காலை 11:30 மணி அளவில் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவதற்காக கார் ஒன்று வந்துள்ளது. அந்த காரில் 4 பேர் இருந்துள்ளனர். 

ttn

பெட்ரோல் போட்டுக் கொண்டு காரில் இருந்து கீழே இறங்கிய மர்ம நபர்கள் சீனிவாசன் மீது திடீரென நாட்டுக் குண்டு வீசி அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். சத்தம் கேட்டு அங்குச் சென்ற ஊழியர்கள் அவர்களிடம் இருந்து சீனிவாசனை மீட்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி அங்கிருந்து வந்த காரிலேயே ஏறித் தப்பிச் சென்றுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த சீனிவாசன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

ttn

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சீனிவாசன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து அங்கு வந்த விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அங்கிருந்த அனைவரிடமும் விசாரணை மேற்கொண்ட பின்,  அப்பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளைச் சோதனை செய்தார். அதில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்து போலீசார் அந்த மர்ம கும்பலைத் தேடி வருகின்றனர். மேலும், சீனிவாசன் முன்விரோதம் காரணமாகக் கொலை செய்யப் பட்டிருப்பாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.